search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகர் விக்ரம்"

    • இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார்.
    • பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    இரணியல்:

    நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் தெப்பக்குளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 46). நடிகர் விக்ரம் ரசிகர்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்தவர். இரணியல் மேலத்தெருவில் ஒரு பேக்கரி கடையில் மிட்டாய் போடும் தொழில் செய்து வந்தார். பாலு நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் வில்லுக்குறி தாண்டி தோட்டியோட்டில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட பாலு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலுவின் மனைவி துர்காதேவி கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் மூலம் தேடி வருகின்றனர்.

    • நடிகர் விக்ரம் சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றவர். சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம், சிறந்த நடிகருக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    தற்போது "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் விக்ரம் 'ஆதித்ய கரிகாலன்' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தகக்து.

    சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் சென்ற கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் காயமடைந்தார்#ActorVikram #Dhruv
    சென்னை:

    நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்தது.

    இதில், ஆட்டோ டிரைவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
    விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்தனர்.

    துருவ் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை ஜாமினில் விடுவித்தனர்.
    ×